Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, December 18, 2013

சென்னையில் நடைபெற்ற ''பாம்புகள் குளிக்கும் நதி'' கவிதை நூல் அறிமுகவிழா.


கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எழுதிய 'பாம்புகள் குளிக்கும் நதி' கவிதை நூல் அறிமுகவிழா  அண்மையில் இணை இயக்குனர் வேடியப்பன் ஏற்பாட்டில் சென்னை கேகே நகரில் அமைந்துள்ள டிஸ்கவரி புத்தக இல்லத்தில் நடைபெற்றது.

'கலைமாமணி' விகேடி பாலன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் புரவலர் டாக்டர் அப்துல்கையூம் முன்னிலை வகிக்க கவிஞர் எஸ்.ஜனூஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவுக்கு கௌரவ அதிதிகளாக இயக்குனர்களான சிபிசந்தர், வெற்றி மஹாலிங்கம், நடிகர் சஞ்சை, எழுத்தாளர் ஆளூர் ஷாநவாஸ், பேராசிரியை ஆதிரா முல்லை, சிரேஷ்ட ஒலிபரப்பாளர் சாத்தான்குளம் அப்துல்ஜப்பார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் நூலாசிரியரை எழுத்தாளர் ஆளூர் ஷநவாஸ், பேராசிரியை ஆதிரா முல்லை , 'கலைமாமணி 'விகேடி பாலன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும்  கலை இலக்கிய கலந்துரையாடல்களின்போது நூலாசிரியரிடம் இருந்து பிரதியினை பெறும் கவிஞர் மு.மேத்தா, கவிதாயினி ராசாத்தி சல்மா, இயக்குனர்களான அமீர், ராஜராஜா,ஜீவாசங்கர், வெற்றி செல்வன், இசையமைப்பாளர்களான எம்.ஜிப்ரான் , சத்தியா, பாடலாசிரியர் ஜெயங்கொண்டான் ஆகியோரையும் விழாவில் கலந்துகொண்டோரையும் படத்தில் காணலாம்.



















No comments:

Post a Comment